சென்னையில் பிரபல நகை கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வந்திருந்தார். அப்போது அவரிடம் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நகை கடை குறித்து கேள்வி இருந்தால் கேளுங்கள் என மழுப்பலாக பதில் கூறினார். மேலும் விடாமல் செய்தியாளர்கள் கேட்டதனால், அன்றைய தினம் புதுச்சேரியில் இருந்தேன் என கூறினார்.

பின்னர் அங்கிருந்து நழுவிய அவர், இன்று திடீரென அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் நல்லவர் வல்லவர், அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என அவர் உருக்கமுடன் பேசியிருக்கிறார்.