குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா. இவர் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துவருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். இந்நிலையில்,  நகைச்சுவை நடிகர் ‘KPY பாலா’, இலவச ஆட்டோ சேவையை தொடங்கினார்.

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், மருத்துவ அவசரத்திற்காக சென்னை அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணிநேரமும் இந்த ஆட்டோ சேவையானது வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு ₹1000, இலவச ஆம்புலன்ஸ் என வழங்கிய இவர் தற்போது இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளதால் பலரும் பாராட்டி வருகின்றனர்.