மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை சென்றடைந்துள்ளார். அவர் தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜெய்சங்கருக்கு இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கே இரவு விருந்து அளித்துள்ளார். முன்னதாக இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

அப்போது பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பிராந்திய நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனையடுத்து பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை சர்வதேச நிதியிடம் இருந்து 2.9 பில்லியன் கடன் பெற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் உத்தரவாதத்தை சர்வதேச நிதியம் கேட்டுள்ளது. இது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேசி வருகின்ற நிலையில் ஜெய்சங்கரின் இந்த இலங்கை பயனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.