
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அபிமன்(64) திடீரென மயங்கி விழுந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அபிமனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறி சான்றிதழும் அளித்துள்ளனர்.
இதனால் குடும்பத்தினர் அபிமனின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது உறவினர் ஒருவர் அபிமனுக்கு இதயத்துடிப்பு இருந்ததை கவனித்துள்ளார். உடனே அவரை வேறொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை அளித்து 30 நிமிடங்களில் அபிமன் கண்விழித்தார். ஏற்கனவே சிகிச்சை அளித்து இறந்து விட்டதாக கூறிய மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது, அருகில் சாலை பணிகள் நடப்பதால் பல்ஸை கணிக்க முடியாததால் அவர் இறந்து விட்டதாக கூறினோம் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.