அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் கணபதி- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரோஜாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கோமதி என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சரோஜா வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கோமதி சரோஜாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதனால் காயமடைந்த சரோஜாவும், கோமதியும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் சரோஜா, கோமதி உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.