
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் சில பகுதிகளில் மதுபான விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற விடுதிகளில் இளம் பெண்கள் ஆபாசமாக உடை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் மற்றும் உணவு வழங்குவது, கவர்ச்சியான பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்றவை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து வந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் சிக்பேட்டை, உப்பார்பேட்டை, எஸ்.ஜே பார்க் மற்றும் கப்பன் பார்க் பகுதிகளில் உள்ள மதுபான விடுதிகளில் நள்ளிரவு நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை நேற்று அதிகாலை வரை நடைபெற்ற நிலையில், சுமார் 19 மதுபான விடுதிகள் ஐகோர்ட் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மதுபான விடுதிகளின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் உரிமையாளர்களுக்கு சரியான விளக்கம் தரும்படி காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளனர்.