கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் நேற்று இரவு கரூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இவர் நெசவாளர் காலனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கார் ஒன்று திடீரென முருகனின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த காரில் கல்லூரி மாணவர்கள் இருந்துள்ளனர். இந்தக் கோர விபத்தில்  முருகன், அவருடைய மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் மற்றும் மகள் நித்திஷா ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.