இந்தியாவில் வங்கி கணக்குகளை விட மக்கள் பலரும் தற்போது அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். ஏனென்றால் வங்கி கணக்குகளை விட கூடுதல் பாதுகாப்பு மற்றும் இரட்டிப்பு லாபம் இதில் கிடைக்கின்றது. அதன்படி போஸ்ட் ஆபீஸ் கிஷான் விகாஸ் பத்ரா திட்டம் மூலமாக முதலீட்டாளர்கள் இரட்டிப்பு லாபத்தை பெற முடியும். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 7.5% வட்டியும் வழங்கப்படுகின்றது.

இதில் நீங்கள் முதலீடு செய்த தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும். அதாவது முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 115 ஆவது மாதத்திற்கு பிறகு 20 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். அதனைப் போலவே விரும்பிய தொகையை முதலீடு செய்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரட்டிப்பு லாபத்தை நீங்கள் பெற்று பயனடைய முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் சேர விரும்பினால் உடனடியாக அருகில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு சென்று பணத்தை முதலீடு செய்து இரட்டிப்பு லாபத்தை பெற்று பயனடையலாம்.