தாய்லாந்து மக்களுக்கு இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து வந்த ராணி சிரிகிட் அக்டோபர் 24 அன்று பாங்காக்கில் அமைந்துள்ள மன்னர் சுலாலாங்கோர்ன் நினைவு மருத்துவமனையில் இரவு 9.21 மணிக்கு காலமானார்.
2019 முதல் உடல்நலக் குறைபாடுகளுக்காக சிகிச்சையில் இருந்த அவர், கிராமப்புற மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல், பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைப் பண்பாட்டை பேணுவதில் பெரும் பங்கு வகித்தவர். தாய்லாந்தின் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் தி கிரேட்டின் மனைவியாக 1950 ஆம் ஆண்டு திருமணமான அவர், அதன் பின் முழு ராணியாக பதவியேற்றார்.

அவரது மறைவையடுத்து, அரச மரபின்படி மிக உயர்ந்த மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற அரசாங்கம் அறிவித்துள்ளதோடு, அரச குடும்பத்தினரும் அதிகாரிகளும் ஒரு ஆண்டு துக்கத்தில் இருக்க மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..
