பிரிட்டனின் பிரதமராக இருப்பவர் இந்தியா வம்சவ வழியை சேர்ந்த ரிஷி சுனக்.  சமீபத்தில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் குறித்து ரிஷி சுனக் அறிவித்திருந்தார்.

இதற்கு அந்நாட்டு பசுமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்ததோடு இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி யார்க் ஷையர் மாகாணத்தில் உள்ள பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டை கருப்பு துணியால்  மூடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.