இயக்குநர் பாரதிராஜாவுக்காக மணிமண்டபம் கட்ட அனுமதி வழங்கிய தமிழக அரசுக்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேரில் சென்று நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் செய்தித்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்துத் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட இக்குழுவினர், இயக்குநர் பாரதிராஜாவின் தன்வரலாற்றுப் புத்தகத்தையும் அவர்களுக்குப் பரிசாக வழங்கினர்.
#பாரதிராஜா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் கல்வி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர்களை சந்தித்து பாரதிராஜாவின் சுயசரிதை புத்தகத்தை வழங்கி… pic.twitter.com/rH2ciBaZ97
— Nikil Murukan (@onlynikil) August 25, 2026
“>
தமிழ் சினிமா உலகின் ஆளுமையான பாரதிராஜாவுக்குக் கவுரவம் சேர்க்கும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்குத் திரையுலகினர் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது.
