
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒடப்பிடாரம் ஆதனூர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சிறிது நேரத்தில் மாணவி திடீரென மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக மாணவியை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு முதலுதவி கொடுத்த பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி இறந்து விட்டார். இதைத் திறந்து மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிக அளவு அரிசி சாப்பிட்டதால் மூச்சு திணறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதாவது அரிசியை ஊறவைத்து சாப்பிடுவதை மாணவி வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த சிறுமிக்கு 12 வயது ஆகும் நிலையில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.