அகமதாபாத்தில் நடைபெற்ற 16வது சீசன்  ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் CSK அணி வெற்றி பெற்றதால், இனி அடுத்த ஒரு மாதம் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட உள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், 2 பந்துகளில் CSK அணிக்கு 10 ரன்கள் தேவை என்றபோது, CSK அடித்துவிட்டால், அவர் சைவ விரதம் இருப்பதாக வேண்டியுள்ளார். அவர் வேண்டியபடி, CSK வெற்றி பெற்றுவிட்டதால், இந்த முடிவை எடுத்துள்ளார். இதை அவரே தனது ட்விட்டரில் வெளிப்படையாக கூறியுள்ளார்.