பெரும்பாலான மனிதர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்வதற்கே சரியான நேரம் இல்லாமல் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகில் பிறரிடத்தில் அன்பு காட்டும் மனிதர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற சக மனிதர்களிடையே அன்பு காட்ட தயங்கும் காலகட்ட சூழலில் பிற உயிரினங்கள் இடத்திலும் அன்பு காட்டுவது என்பது மனிதாபிமானத்தின் உச்சமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் அணில் ஒன்று மிகவும் தாகத்துடன் சுற்றித் திரிவதை கண்ட இளம் பெண் ஒருவர் தனது கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரை அணிலுக்கு தந்து உதவிய வீடியோ காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் அப்பெண்மணிக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.