இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் பயங்கரமாகவும் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரது தலையில் பூரான் ஒன்று புகுந்து விட்டது.
அந்த பூரான் அவருடைய தலைமுடியிலிருந்து ஆட்டம் காட்டிய நிலையில் எப்படியோ லைட் அடித்து ஒரு வழியாக அதனை வெளியே எடுத்தனர். அது காதுக்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த நபர் தன் காதை பொத்திக் கொள்ள ஒருவர் இந்த பூரானை வெளியே எடுத்தார். மேலும் மழை நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
View this post on Instagram
