சமூக வலைதளத்தில் தற்போது வைரல் ஆகும் ஒரு வீடியோ இப்படியும் நடக்குமா என்ற விதத்தில் மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. அதாவது கன்னியாகுமரி-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வடநாட்டு பயணி ஒருவர் சென்றார். அவர் கொட்டாவி விடும்போது திடீரென அவருடைய தாடை ஸ்டக் ஆகிவிட்டது.

இதனால் அவர் வாயை திறந்தபடியே மிகவும் சிரமப்பட்டார். அவர் தன்னுடைய வாயை மூட முடியாமல் சிரமப்பட்ட நிலையில் பின்னர் டாக்டர் சிகிச்சை அளித்து அதனை சரி செய்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.