இச்சம்பவம் ஒரு பிரபல தாய்லாந்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட போது, சட்ட வல்லுநர்கள் இத்தகைய ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு நபரை வாடகைக்கு விடுவது போன்ற செயல்கள் தாய்லாந்தின் ஒருதார மணச்சட்டத்திற்கு எதிரானது என்றும், இது பொது ஒழுக்கத்திற்குப் புறம்பானது என்பதால் நீதிமன்றத்தில் சட்டப்படி செல்லாது என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்
