
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனுமந்த புத்தேரி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுபாஷினிக்கு பெண் குழந்தை பிறந்தது யுவராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்ததால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குடும்ப செலவுகளை சமாளிப்பதற்காக ஆன்லைன் செயலி மூலம் யுவராஜ் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சரியான நேரத்தில் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.