தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்பிற்கு E-KYC (Identity Verification) பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, போலி இணைப்புகளைக் கண்டறியவும், மானியத் தொகையை உரிய பயனாளிகளுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கவும் LPG வாடிக்கையாளர்களுக்கு E-KYC பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், தமிழகத்தில் இன்னும் 50 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த E-KYC பதிவை முடிக்காமல் உள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைக்குள் E-KYC பதிவை முடிக்காத வாடிக்கையாளர்கள், நாளை முதல் ஆன்லைனிலோ அல்லது நேரடியாகவோ தங்களது சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதிவு செய்ய முடியாத சூழல் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த திடீர் சிக்கலையும் ஏஜென்சிகளில் வரிசையில் நிற்பதையும் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் தங்களின் சமையல் எரிவாயு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் (Indane / Bharatgas / HP Gas Apps) மற்றும் Aadhaar FaceRD செயலி மூலமாக வீட்டிலிருந்தபடியே உடனடியாக E-KYC பதிவை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
