சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் இன்று  மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடானது  CM ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொள்ள உள்ளனர்.

இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முக்கிய முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல கட்சி தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் 2024 தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.