இந்த வருடத்தின் கடைசி முழு சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்த கிரகணம் 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாலயா அமாவாசையில் நிகழ்வதால் இது இந்தியாவில் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இருந்தாலும் கிரகணத்தின் போது ஏற்படும் சூரிய வலயத்தை இந்தியாவில் காண இயலாது. மேற்கத்திய நாடுகளில் மட்டுமே சூரியனின் நெருப்பு வளையத்தை காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.