பொதுவாகவே நாம் எக்சலேட்டர்களில் நின்றால் அவை நம்மை மேலே அல்லது கீழே நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால் சிலர் எஸ்கலேட்டர்களில் நடக்கும் போது அல்லது ஓடும்போது சில விபத்துக்கள் ஏற்படுவது உண்டு. வேகமாக செல்லும் முயற்சியில் பலர் இதனை செய்வதால் ஜப்பான் நாட்டு அரசு இதற்கு தடை விதித்துள்ளது. அங்கு அவசர நிலை ஏற்பட்டாலும் விபத்துக்களை தவிர்க்க எஸ்கலேட்டர்களில் நடக்க தடை செய்யப்பட்டு இந்த முடிவை ஜப்பான் அரசு எடுத்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.