சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருந்தாலும் தற்போது மெட்ரோ ரயிலில் ஏராளமானோர் பயணித்து வருவதால் பீக் ஹவரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தற்போது ஒன்பது நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை இன்று நவம்பர் 27ஆம் தேதி முதல் 7 நிமிட இடைவேளையில் இயக்கம் மெட்ரோ நிர்வாக முடிவு செய்துள்ளது.