பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார பயன்பாடு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நண்பகல் வேளையில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருதி எம் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், இன்று காலை 7.30 மணிக்கு தனது அலுவலகத்தை அடைந்தார். பஞ்சாப் அரசு மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட முடிவு செய்துள்ளது.