அயோத்தி ராமர் கோயில் ஆனது கடந்த 22 ஆம் தேதி திறக்கப்பட்டது. பிரதமர் மோடி பிரான  பிரதிஷ்டை செய்ததை தொடர்ந்து 23ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்ட வருகிறார்கள். அனுமதி அளிக்கப்பட்ட முதல் நாளை சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் ராமரை தரிசனம் செய்தார்கள். தொடர்ந்து நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு குவிந்த வண்ணம் வருகின்றனர்.  இந்நிலையி பிப்ரவரி 1 முதல் அயோத்திக்கு 8 வழித்தடங்களில் விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.