சிவகங்கையில் உள்ள திருப்புவனம் வட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் நடந்த பலகட்ட அகழாய்வு பணிகளின் போது 2006 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருள்கள் கண்டறியப்பட்டது. இந்த பொருள்கள் அனைத்தையும் தமிழக அரசு அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த அருங்காட்சியகத்திற்கு தினம்தோறும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதி இம்மானுவேல் சேகரின் நினைவு தினத்தை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.