
கர்நாடகா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பெண் மருத்துவருக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலை 5:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு தங்களின் மருத்துவ பணியை தொடர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளது.