ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த சிவா என்ற நபர் ஒருவர் குடும்ப சூழல் காரணமாக துபாய் சென்று வேலை செய்யலாம் என முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து துபாய் கிளம்பிய அவர் எதற்காக இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து ஆடு மேய்க்கும் வேலை பார்க்க ஏஜென்ட் மூலமாக சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவரை ஆள் நடமாட்டமே இல்லாத நடு பாலைவனப் பகுதியில் விட்டு ஆடுகள் மற்றும் வாத்துக்களை மேய்க்க விட்டு உள்ளனர். பேச்சு துணைக்கு கூட ஆளில்லாமல் கஷ்டப்படும் அவர் வீடியோ வெளியிட்டு இன்னும் இரண்டு நாள் இருந்தால் நான் செத்து விடுவேன் எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.