இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனித உயிருக்கு இருக்கும் ஆபத்தும், அதே வேளையில் ஒரு தாயின் பாசத்திற்கு இருக்கும் அளப்பரிய ஆற்றலும் உலகையே வியப்பில் ஆழ்த்தக்கூடியவை என்பதை உணர்த்தும் வகையில், நேபாளத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றின் வீடியோ தற்போது வெளியாகி அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது.

இதனால் நேபாளத்தில் கரைபுரண்டு ஓடும் பெருவெள்ளத்தில், ஒரு தாய் தனது சிறுமிப் பெண் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு அவளைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்துப் போராடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.

வெறும் இரண்டு வினாடிகள் தாமதித்திருந்தாலும் அந்தப் பிஞ்சு குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் என்ற நிலையில், அந்தத் தாயின் வீரம் மற்றும் மின்னல் வேகச் செயல்பாடு குழந்தையை மாபெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது.

கணநேரத்தில் உயரும் நீர்மட்டமும், சுழன்றடிக்கும் வெள்ளப் பெருக்கும் அந்தப் பகுதியையே அச்சத்தில் உறைந்துபோக வைத்திருந்தது. சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாகவே ஆபத்துச் சூழ்ந்த அந்த நொடியில், தான் அடித்துச் செல்லப்பட்டாலும் பரவாயில்லை, தன் குழந்தை பத்திரமாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு அந்தத் தாய் செயல்பட்டுள்ளார்.

வெள்ளத்தின் கரடுமுரடான வேகத்திற்கு ஈடுகொடுத்து, குழந்தையைத் தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு அவர் நடத்திய அந்த உயிருக்குப் போராடும் போராட்டம், தாய்மையின் எல்லையற்ற சக்தியையும் தன்னலமற்ற தியாகத்தையும் பறைசாற்றுவதாக அமைந்தது.

மேலும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவி வரும் இந்த வீடியோ, பார்க்கும் ஒவ்வொருவரின் மனதையும் உரைய வைத்து, அதே நேரத்தில் அந்தத் தாயின் சாதுர்யத்தையும் துணிச்சலையும் பார்த்துப் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் பேரழிவுகளின் போது மனித இனம் எதிர்கொள்ளும் சோதனைகளுக்கு மத்தியிலும், எந்தவொரு கடினமான சூழலையும் எதிர்கொள்ளத் தயங்காத ஒரு தாயின் அன்புதான் இவ்வுலகின் மிகப்பெரிய பாதுகாப்பு அரண் என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது.

“>