விக்சித் பாரத் திட்டம் தொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு குறுஞ்செய்தி அனுப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் என பொருள்படும் விக்சித் பாரத் திட்டம் குறித்து மக்களுக்கு மத்திய அரசின் ஐ.டி அமைச்சகம் நாட்டில் பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வந்தது.

தேர்தல் நடத்தி விதி அமலுக்கு வந்த பின் பாஜக அரசின் திட்டம் குறித்து மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது விதிமீறல் என புகார் எழுந்தநிலையில், தேர்தல் ஆணையம் தற்போது தடை விதித்துள்ளது.