ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப் பெறலாம் என்றார். மேலும், இந்த நடைமுறையால் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது எனவும் அவர் விளக்கமளித்தார்.