அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை (144 கி.மீ.) இடையே மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளதால், வரும் நாட்களில் சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம் 20 நிமிடங்கள் குறையும் என கூறப்பட்டுள்ளது.

பெங்களூருக்கு செல்லும் ரயில்களின் பயண நேரம் குறிப்பிடத்தக்க வகையில் குறைகிறது. ஏனெனில், மொத்த பயண நேரம் இப்போது 4 மணி நேரம் 25 நிமிடங்களில் இருந்து 4 மணி நேரமாக வந்தே பாரத் பயணத்திற்கு குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.