ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு வெறும் 428 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை கோவா மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை குறைத்ததால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசின் பம்பர் பரிசு கிடைத்துள்ளது. அதாவது மத்திய அரசு  சிலிண்டர் விலையை ரூ. 200 குறைத்தது.

இதனையடுத்து கோவா மாநில அரசு இந்த பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவா மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டை வைத்திருப்பவர்களுக்கு 428 ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்கும். இந்த அறிவிப்பால் அம்மாநில சிலிண்டர் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.