கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு 315 ரூபாயிலிருந்து 340 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதனைப் போலவே தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகையாக டன்னுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு பங்களிப்பு 340 மற்றும் தமிழக அரசு பங்களிப்பு 215 ரூபாய் என மொத்தம் 555 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.