தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இருந்தால் தான் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருள் வாங்க முடியும்.  இதன் மூலமாக அரசின் நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கார்டுகள் தொலைந்து விட்டால் ஆன்லைனில் பெறும் வசதியை உணவுத்துறை ஏற்படுத்தி இருக்கிறது.

www.tnpds.gov.in  என்ற இணையத்தளத்தி “பயனாளர்கள் நுழைவு” என்ற ஆப்ஷனை முதலில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு செல்போன் நம்பரை பதிவிட வேண்டும். பின் உங்களின் நம்பருக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து, ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து ஆப்ஷனை தந்தால் போதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைத்துவிடும்.