நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்ய நாராயணன் ஆவார். ரஜிகாந்த்தின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அதிகம் பேசிவந்தவர் சத்ய நாராயணன். ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தபின் அரசியல் வேண்டாம் என தடுத்தவரும் இவர்தான். இதையடுத்து ரஜினி மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், நலம் விரும்பிகளின் வேண்டுகோள்படியும் நான் அரசியலுக்கு வரவில்லை என முறைப்படி அறிவித்து விட்டார்.

எனினும் ரஜினி மனம் மாறி மீண்டும் அரசியலுக்கு வரலாம் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினி இனிமேல் அரசியலுக்கு வந்தாலும் பலனில்லை என அவரது அண்ணன் சத்ய நாராயணன் கூறி இருக்கிறார். ரஜினிகாந்த்துக்கு வயதாகி விட்டது. ஆகவே அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை என்று சத்ய நாராயணன் கூறினார்.