தமிழகத்தில் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்வதற்கு எஸ்பிக்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம் என்று போலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையான எஃப் ஐ ஆர் பதிவு செய்வதற்கு எஸ்பிக்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம்.

அது இனி தேவையில்லை. பதற்றமான, நியாயமான மற்றும் முக்கிய விவகாரம் தொடர்பாக தேவைக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இதற்காக உயர் அதிகாரியின் அனுமதிக்காக யாரும் காத்திருக்க வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.