மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கைகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ள இருப்பதாக அம் மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதோடு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி பிவி ஹரிதாஸ் தலைமையில் குழு ஒன்று  அமைக்கப்பட்ட நிலையில் அந்த குழு தன்னுடைய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை மாநில அரசு பரிசீலனை செய்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பங்களில் மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை விவரங்கள் இணைக்கப்பட வேண்டும். ஒருவேளை பெற்றோர்களால் தங்களுடைய ஆதார் அட்டையை சமர்ப்பிக்கப்பட முடியாவிட்டால் மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை வழங்கப்பட வேண்டும். இதை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பள்ளிகளுக்கான மானியத்தை திரும்ப பெறுவது மற்றும் உரிமத்தை இழக்கச் செய்வது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.