தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஷால் இனி யாரும் மற்ற படங்களை காப்பியடித்து படங்கள் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அதாவது திரையரங்குகளில் ரிலீசான பிறகு படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. அந்த படங்களை எல்லாம் மக்கள் பார்த்து விடுகிறார்கள். எனவே காப்பியடித்து இனி படங்கள் எடுக்க முடியாது. மேலும் ஒரு வேலை காப்பி அடித்து படம் இயக்கினாலும் அதனை மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.