பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வித்யா பாலன் பெண்களை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்களை சில நடிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை வித்யா பாலன் என்னுடைய திறமையால் மட்டும் தான் எனக்கு பட வாய்ப்புகள் வருகிறது என்று கூறினார். அதன் பிறகு வேறு எந்த ஒரு  காரணங்களாலும் எனக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை. மகளிர் உரிமை மற்றும் அதிகாரத்தை வலியுறுத்தும் கதைக்களத்தில் நான் நடிப்பதால் தான் முன்னணி ஹீரோக்கள் என்னுடன் சேர்ந்து நடிப்பதை விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.