விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து நடிகைகள் மாற்றப்பட்டு வருகின்றனர். விஜே தீபிகா ஐஸ்வர்யாவாக நடித்து வந்த சூழ்நிலையில், அவரது வெளியேற்றத்துக்கு பின் சாய் காயத்ரி இந்த சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இப்போது சாய் காயத்ரியும் இந்த சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார். இதுகுறித்து சாய் காயத்ரி கூறியதாவது “இனிமேல் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்காது. அது என் சினிமா வாழ்க்கைக்கு பிரச்சனையாக அமைந்துவிடும். எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்து உள்ளார்.