தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 15 ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று காலை 10 மணி வரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 தினங்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்றும் இதனால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.