தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரையில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதேபோன்று சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புள்ளது.