சமூக வலைதளங்களில் பலவிதமான வீடியோக்கள் பரவி வருகின்றன. அவற்றில் ஒரு ஆச்சரியமூட்டும் வீடியோவில், ஒரு நபர் தனது வாயில் பல குளவிகளை வைத்திருப்பது போலத் தோன்றுகிறது. அவர் வாயைத் திறந்தவுடன், குளவிகள் ஒவ்வொன்றாகப் பறந்து வெளியேறுகின்றன. இது உண்மையாக செய்யப்பட்ட ஆபத்தான செயலா அல்லது வீடியோ எடிட்டிங்கின் மூலம் உருவாக்கப்பட்டதா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

A post shared by @69apps

இன்ஸ்டாகிராமில் @69apps என்ற கணக்கில் வெளியான இந்த வீடியோவில், ஒரு நபர் தொப்பி அணிந்து, முதலில் வாயை மூடி நிற்கிறார். பின்னர், அவர் புன்னகைத்து வாயைத் திறக்கும்போது, குளவிகள் வெளியே பறக்கத் தொடங்குகின்றன. இந்தக் காட்சி பார்ப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது. பலர் இதை “மிகவும் ஆபத்தான செயல்” என்று கூற, சிலர் “இது AI அல்லது எடிட்டிங் மூலம் செய்யப்பட்டது” என்று கருத்து தெரிவிக்கின்றனர். “வாஸ்ப் மேன்” என்று அழைக்கப்படும் இந்த வீடியோ பலரிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.