தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவர் நடிப்பில் அண்மையில் கனெக்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார். இந்நிலையில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள சாலையோர மக்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வழங்கியுள்ளனர்.

அப்போது சாலையோர மக்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு பரிசு பொருட்களை வாங்க வந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் நயன்தாரா அனைவருக்கும் பரிசு பொருட்களை கொடுத்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகை நயன்தாராவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.