தமிழகத்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வீட்டை விட்டு வெளியே வருவோருக்கு இதய பாதிப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் நண்பகல் வேளையில் வெளியில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் 108 மற்றும் 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.