தமிழக அரசானது மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பள்ளிகளின் தரம் உயருவதற்கும், மாணவர்களின் எதிர்கால நலமாக இருக்கவும் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதே போல கல்வித்துறையில் அதிகரித்து வரும் செலவை  குறைப்பதற்கும் மாணவர் எண்ணிக்கை குறைவாக கொண்ட பள்ளிகள் ஆனது அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 13, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 59 குறைவாக உள்ள பள்ளிகள் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு பள்ளிகள் வாரியான இணைப்பு விவரப்பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகள் அதிகாரப்பூர்வ பட்டியலில் குறிப்பிட்டுள்ள விவரங்களை அறிந்து கொள்ளுமாறும் அதற்கு ஏற்ப நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.