இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் மசாலாவில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி எத்திலின் ஆக்சைடு இருப்பதாக சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிங்கப்பூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன் மசாலாக்களை திரும்ப பெற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.