இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 927 புள்ளிகளும், நிப்டி 272 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. விலைவாசி உயர்வு, சர்வதேச பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் முதலீடுகள் வெளியேறும் என்ற அச்சத்தால் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.