ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் இன்று மும்பை புறப்படுகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனாத தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.